Thursday, 19 February 2015

நெஞ்சார்ந்த நன்றிகள்.

   இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் (வட்டங்களிலும்தொடர்ந்து வெளியிடபட்டு வந்த PA - SA  தேர்வு முடிவுகள் 2014 நமது மாநிலத்தில் மட்டும்  நீண்ட   காலமாக  தடைபட்டு தாமதமாகியும் வந்தது. நமது ஆள் பற்றாக்குறையை கலைத்திட பல முறை கோரியும் வலியுறுத்தி வந்ததும்  நினைவிருக்கலாம்.

  
     சமீபத்தில் நமது CPMG  திரு மூர்த்தி அவர்கள் பதவி உயர்வு பெற்று செல்லும் முன்பு  வெளியிடப்படும் என எதிர்பார்த்தோம், ஆனால் நடைபெறவில்லை . அதனை தொடர்ந்து நமது CPMG ஆக  கூடுதல் பொறுப்பு ஏற்ற கர்நாடகா CPMG திரு ராமானுஜம் அவர்களை 
நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்க அகில இந்திய துணை பொது செயலாளர்களில் ஒருவரான திருவண்ணாமலை திரு சரவணன் அவர்கள்

நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கர்நாடக மாநில செயலாளரும் அகில இந்திய துணை பொது செயலாளர்களில் ஒருவருமான திரு சிவகுமார் அவர்களை தொடர்ப்பு கொண்டு வலியுறுதியத்தின் பயனாக கடந்த 4 தினங்களில் பலமுறை தொடர்ந்து  திரு சிவகுமார் அவர்கள் கர்நாடகா CPMG திரு ராமானுஜம் அவர்களை வலியுறுத்தி நீண்ட   காலமாக  தடைபட்டு தாமதமாகியும் வந்த PA SA  தேர்வு முடிவுகள் 2014  நேற்று உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது.   

        அதற்கு பெருமுயற்சி எடுத்த  நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்க அகில இந்திய துணை பொது செயலாளர்கள் திரு சரவணன் , திரு சிவகுமார்  மற்றும் கர்நாடகா CPMG திரு ராமானுஜம் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment