Wednesday, 26 August 2015

செப்டம்பர் 2 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

      மத்திய அரசின்  தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைக்கு  எதிராக அனைத்து தேசிய தொழிற்சங்ககள் மற்றும் நமது சம்மேளனத்தின்  அறைகூவலின் படி நடைபெறும் செப்டம்பர் 2 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தமிழ்மாநில சங்கம் வேண்டுகிறது. 
        
இது  அரசின் தவறான கொள்கை எதிராக தேசிய தொழிலாளர் நலன் சார்ந்த வேலைநிறுத்தம். அதற்காக நமது துறை தலைவரிடம் 17 இம் தேதி ஒரு வேலைநிறுத்த கடிதம் கொடுத்துள்ளோம். எனவே நாமும் செப்டம்பர் 2 அன்று நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில்  100% பங்கேற்று  முழு வெற்றி பெற அயராது பாடுபட வேண்டுகிறோம். குறிப்பாக நமது FNPO தோழர்கள் அனைவரையும் பங்குபெற செய்ய வேண்டுகிறோம். 
      உங்களின் மேலான ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் நாம் செப்டம்பர் 2 - 2015 அன்று வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு வேலைநிறுத்தத்தில் பங்குபெற்று வெற்றிபெற செய்ய நம்முடைய தமிழ்மாநில சங்கம் உங்களிடம் அன்புடன் வேண்டுகிறது. 
        நன்றி 
        வெல்லட்டும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம். எங்கும் 
        முழங்கட்டும் நமது போராட்ட முழக்கங்கள் 
        எட்டட்டும் அரசின் செவிப்பறையை 
        கிட்டட்டும் வெற்றி நமக்கு.

குறிப்பு நமது தமிழ் மாநில சங்கம் சார்பில் போராட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடனே போராட்ட பணியில் ஈடுபட வேண்டுகிறோம். நமது சகோதர சங்கங்களுடன் இணைந்து உடனடியாக வேண்டுகிறோம்,

No comments:

Post a Comment